Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய பொது சேவைக்கான விருது

நவம்பர் 04, 2023 03:43

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரிக்கு  2023 ஆம் ஆண்டிற்கான பொது சேவை விருதை சென்னை, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு  அண்மையில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.

பொது சேவைக்கான விருது நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பொது நூலகர்களுக்கு ஏழு நாள் இலவச  திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக வழங்கப்பட்டது.

இந்த  விருதினை கல்லூரியின்  சார்பாக முதல்வர்   கோபாலகிருஷ்ணன் மற்றும் நூலக இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன், தலைமை நிர்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் மற்றும் இயக்குனர்கள் விருதுக்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டினார்கள்.

தலைப்புச்செய்திகள்